வாழப்பாடி அருகே சாலை விபத்தில் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர் பலியானார்.
வாழப்பாடியை அடுத்த சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (51). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகவில்லை. வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி மைக்ரோ நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பணிக்கு சென்ற அவர், மைக்ரோ நிலையம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாகச் சென்ற கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.