ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு படிப்பை முடித்த சிறுவர்களுக்கு மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளித் தாளாளர் எஸ்.இளவரசு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புனிதவதி செல்வன் கலந்து கொண்டு, பெற்றோர்கள் அதிக நேரம் குழந்தைகளோடு செலவிடுங்கள் எனக் கூறி பட்டங்களை வழங்கினார். முடிவில் முதல்வர் சாந்தக்குமார் நன்றி கூறினார்.