மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 2,566 கன அடியாகச் சரிந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 3,501 கன அடியாக அதிகரித்தது.
நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழையளவு குறைந்த காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 2,566 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 5.64 டி.எம்.சி.யாக இருந்தது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 24.88 அடியாக உயர்ந்துள்ளது.