வாழப்பாடி அருகே விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண்ணும், விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் தனியார் பொறியியல் கல்லுôரி மாணவரும் உயிரிழந்தனர்.

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண்ணும், விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் தனியார் பொறியியல் கல்லுôரி மாணவரும் உயிரிழந்தனர்.
 வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜானந்தம் மனைவி வைலட் ப்ளோரா பாய் (60). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துள்ளார். அப்போது சேலத்தில் இருந்து வாழப்பாடி நோக்கி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
 விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் தவறி சாலையில் விழுந்த இளைஞர் மீது அவ்வழியாக வந்த கார் மோதியதில், அவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் பலியான இளைஞர், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த வையாபுரி மகன் விக்னேஷ்(23) என்பதும், ஓமலூரிலுள்ள தனியார் பொறியியல் கல்லுôரி மாணவர் என்பதும் தெரியவந்ததுள்ளது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com