சேலத்தில் கைதான இளம்பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட பெண் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட பெண் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
 நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்த
 துண்டுப் பிரசுரங்களை அரசு மகளிர் கல்லூரி முன் விநியோகம் செய்ததாக வளர்மதி (23) , ஜெயந்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
 இதில் ஜெயந்தி விடுவிக்கப்பட்டார். ஏற்கெனவே, போராட்டம் தொடர்பாக 6 வழக்குகள் உள்ள நிலையில் வளர்மதி சிறையில் அடைக்கப்பட்டார்.
 இந்நிலையில், வளர்மதியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாநகர
 காவல் துறை ஆணையர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் சேலம் மகளிர் சிறையில் இருந்து கோவை மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com