மேட்டூர் அணை நீர்மட்டம் 25.21அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 25.21 அடியாக உயர்ந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 25.21 அடியாக உயர்ந்தது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இந் நிலையில், கடந்த இரு தினங்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது.
திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 2,589 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு குறைவான தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 25.21 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 5.75 டி.எம்.சி.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com