சங்ககிரி மலையில் 3-ஆவது நுழைவு வாயிலை அடுத்துள்ள அருள்மிகு கௌண்டன்ய வரதராஜ பெருமாள் உடனமர் ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தையொட்டி புஷ்ப யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 58 கிலோ எடையுள்ள பல்வேறு பூக்களைக் கொண்டு சிறப்பு புஷ்ப யாகம் நடைபெற்றது. இதில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு வழிபட்டனர்.