ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூர் கண்ணாடி மில் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் சேலம் சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலருமான வி.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் வழக்குரைஞர்கள் சி.வி.ராஜேந்திரமகாஜன், ஜி.சுமதி, என்.ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சட்டங்கள் பற்றி விளக்கினர். பெண் உரிமை, மனித உரிமை உள்ளிட்ட வழக்குகள் பற்றியும் விளக்கிப் பேசினர்.
இந்த முகாமில் பாரதியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.இளவரசு, செயலர் ஏ.கே.ராமசாமி, பொருளாளர் எஸ்.ஆர்.டி.ஆர்.செல்வமணி, இயக்குநர்கள் சந்திரசேகரன், பாலக்குமார், செந்தில், முதல்வர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.