ஏற்காட்டில் மூன்று நாள் ஜமாபந்தி

ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 20 ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை மூன்று நாள்கள் வருவாய்த் தீர்வாயம் நடைபெறவுள்ளது.

ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 20 ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை மூன்று நாள்கள் வருவாய்த் தீர்வாயம் நடைபெறவுள்ளது.
 நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயபாபு தலைமை வகிக்கிறார். பொதுமக்கள் பட்டா மறுதல் முதியோர் உதவி, சாதிச் சான்றிதழ், நலத் திட்ட உதவிகள் போன்ற மனுக்களை அளித்து குறைகளுக்குத் தீர்வு காணலாம். மேலும் இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொள்வதால், பொதுமக்கள் ஜமாபந்தி நடைபெறும் நாள்களை முழுமையாகப் பயன்படுத்தி பலன் அடையுமாறு ஏற்காடு வாட்டாட்சியர் கே. பத்மபிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com