ஓமலூரில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உணவளித்து, ராகுல் காந்தியின் 47}வது பிறந்த நாளை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திங்கள்கிழமை கொண்டாடினர்.
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஓமலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் மோகன் குமாரமங்கலம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்புடன் காலை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.