கெங்கவல்லி வட்டத்தில்5 பேரூராட்சிகளில் ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

கெங்கவல்லி வட்டத்தில் உள்ள 5 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர், பேரூராட்சி ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்புதல், 7-ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துதல்,

கெங்கவல்லி வட்டத்தில் உள்ள 5 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர், பேரூராட்சி ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்புதல், 7-ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துதல், கணினி ஊழியர்களை நிரந்தரமாக்குதல் உள்பட 20 அம்சக் கோரிக்களை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி பேரூராட்சியில் 14, தம்மம்பட்டி பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் 23 பேர் உள்பட 33 பேர், செந்தாரப்பட்டி பேரூராட்சியில் 13, தெடாவூர் பேரூராட்சியில் 9, வீரகனூர் பேரூராட்சியில் 9 என மொத்தம் கெங்கவல்லி வட்டத்திலுள்ள 5 பேரூராட்சிகளில் 88 பேர்கள் புதன்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அனைத்துப் பேரூராட்சிகளிலும் தாற்காலிகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே வேலையில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் துப்புரவுப்பணிகள் பாதிக்கப்பட்டதால், பேரூராட்சிகளில் குப்பைகள் தேங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com