கெங்கவல்லியில் ஜமாபந்தி நிறைவு: 151 பேருக்கு நலத் திட்ட உதவி அளிப்பு

கெங்கவல்லியில் ஜமாபந்தி நிறைவுநாளில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கெங்கவல்லியில் ஜமாபந்தி நிறைவுநாளில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கெங்கவல்லியில் புதன்கிழமையுடன் ஜமாபந்தி நிறைவுபெற்றது. இதில் சுமார் 2300-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. நிறைவுநாளில், வட்டாட்சியர் வரதராஜன் , வருவாய் ஆய்வாளர்கள் ர பரசுராமன்,சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், நலத்திட்ட உதவிகளாக ஸ்மார்ட் கார்டுகள் 5 பேருக்கும், உடல் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை ஆணை இருவருக்கு, வீட்டுமனைப் பட்டா 59 பேருக்கு, பட்டா மாறுதல் 87 பேருக்கு என 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com