கெங்கவல்லியில் ஜமாபந்தி நிறைவுநாளில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கெங்கவல்லியில் புதன்கிழமையுடன் ஜமாபந்தி நிறைவுபெற்றது. இதில் சுமார் 2300-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. நிறைவுநாளில், வட்டாட்சியர் வரதராஜன் , வருவாய் ஆய்வாளர்கள் ர பரசுராமன்,சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், நலத்திட்ட உதவிகளாக ஸ்மார்ட் கார்டுகள் 5 பேருக்கும், உடல் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை ஆணை இருவருக்கு, வீட்டுமனைப் பட்டா 59 பேருக்கு, பட்டா மாறுதல் 87 பேருக்கு என 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்.