தலைவாசல் தேசிய புறவழிச்சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் இரு இளைஞர்கள் புதன்கிழமை உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரசூல்அலி (22), அப்துல் அதுல் (22) ஆகியோர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பதற்காக விசாரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரசூல் அலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அப்துல் அதுல் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தலைவாசல் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து, இரு இளைஞர்களின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.