வாழப்பாடி வட்டம், திருமனுôர் கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் 16 குடும்பங்களுக்கு, வாழப்பாடி வருவாய்த் துறை சார்பில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
திருமனுôர் கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் 16 குடும்பத்தினர், பட்டா இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே, வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வாழப்பாடி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற வருவாய்த்துறை அதிகாரிகள், நத்தம் புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து, 16 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு செய்தனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாட்சியர் செல்வக்குமார், துணை வட்டாட்சியர்கள் வெங்கடேசன், ஸ்ரீதரன் ஆகியோர் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினர். வாழப்பாடி வருவாய் ஆய்வாளர் சின்னத்தம்பி, திருமனுôர் கிராம நிர்வாக அலுவலர் குழந்தைவேலு ஆகியோர் உடனிருந்தனர்.