மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 28.25 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 49 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 6.84 டி.எம்.சி.யாக இருந்தது. நீர்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி மீனவர்களும் கவலையடைந்துள்ளனர்.