தமிழகம் முழுவதும் தேசிய திறனாய்வுத் தேர்வு (NAS - NATIONAL ACHIEVEMENT SURVEY) 3, 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள்கிழமை (நவ.13) நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒஎம்ஆர் தாளில் பதிலளிக்கவேண்டும்.இந்தத் தேர்வில் ஆங்கிலம் நீங்கலாக தமிழ், கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நடைபெறம் இத்தேர்வை ஆய்வு செய்ய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.