மருந்துக் கடையில் ரூ.77 ஆயிரம் திருட்டு

சேலத்தில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ.77 ஆயிரம் பணம் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலத்தில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ.77 ஆயிரம் பணம் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் சையத் முஸ்தபா. இவர் ஏ.வி.ஆர். ரவுண்டானா சாலைச் சந்திப்பில் மருந்துக் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல திங்கள்கிழமை காலை கடையைத் திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சூரமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.77 ஆயிரம் ரொக்கம்,, 2 கண்காணிப்புக் கேமராக்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில், கடையில் இருந்த கண்காணிப்புக் கேமராக்கள் கடந்த சில நாள்களாக செயல்படாமல் இருப்பது தெரிந்து, மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com