நேரு பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆத்தூரில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128-ஆவது பிறந்த நாளை இந்திய தேசிய காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை கொண்டாடினார்.

ஆத்தூரில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128-ஆவது பிறந்த நாளை இந்திய தேசிய காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை கொண்டாடினார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஜவாஹர்லால் நேருவின் 128-ஆவது பிறந்த நாளை சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமயில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளர் ஆர்.ஓசுமணி அனைவரையும் வரவேற்றார். ஆத்தூர் சாரதா ரவுண்டானா அருகில் நேரு ஸ்தூபி அருகில் நேருவின் திரு உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. இதில், நரசிங்கபுரம் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.தர்மராஜ், எஸ்.சித்தமலை, கே.டி.தர்மலிங்கம், நரசிங்கபுரம் நகரத் தலைவர் ஜோதிபாசு, ஏ.சத்தியமூர்த்தி, சம்பத், வாழப்பாடி நகரத் தலைவர் ரவிமணி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு வட்டாரத் தலைவர் பழனிசாமி, தெற்கு வட்டாரத் தலைவர் அர்ச்சுணன், மாவட்ட சிறுபான்மை தலைவர் சையத் முஸ்தபா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்புநிதி, சம்பத், அய்யாவு உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com