சங்ககிரி கழுகுமேடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது செவ்வாய்க்கிழமை லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கராஜ் மகன் ரமேஷ் (43). இவர் சங்ககிரி அருகே உள்ள கொங்கணாபுரம் பிரிவு சாலையில் உள்ள லாரி பட்டறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கழுகுமேடு பகுதியில் சென்ற போது, சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.