தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொத்தமல்லி உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிந்துள்ளது.
தம்மம்பட்டியிலுள்ள காய்கறி மண்டிகளுக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் ஒரு கொத்தமல்லி கட்டு ரூ.25-க்கு விற்றது, கடந்த ஞாயிறன்று ரூ.10-க்கு விற்றது. காய்கறி மண்டிகளில் முன் 300 கட்டுகள் வந்தன, தற்போது 2,700 கட்டுகள் வருகின்றன. அதனால், மூன்று கட்டுகள் கொத்தமல்லி ரூ.10-க்கு விற்பனையாயின. இதுகுறித்து மண்டி உரிமையாளர் கதிர்வேல் கூறியது, மழையினால் கொத்தமல்லியை அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களில் பயிரிட்டதால் வரத்து அதிகரித்துவிட்டது. இதனால் விலை குறைந்துவிட்டது என்றார்.