தம்மம்பட்டியில் கொத்தமல்லி கட்டு விலை சரிவு

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொத்தமல்லி  உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிந்துள்ளது.

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொத்தமல்லி  உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிந்துள்ளது.
தம்மம்பட்டியிலுள்ள காய்கறி மண்டிகளுக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் ஒரு கொத்தமல்லி கட்டு ரூ.25-க்கு விற்றது, கடந்த ஞாயிறன்று ரூ.10-க்கு விற்றது. காய்கறி மண்டிகளில் முன் 300 கட்டுகள் வந்தன, தற்போது 2,700 கட்டுகள் வருகின்றன. அதனால், மூன்று கட்டுகள் கொத்தமல்லி ரூ.10-க்கு  விற்பனையாயின. இதுகுறித்து மண்டி உரிமையாளர் கதிர்வேல் கூறியது, மழையினால் கொத்தமல்லியை அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களில் பயிரிட்டதால் வரத்து அதிகரித்துவிட்டது. இதனால் விலை குறைந்துவிட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com