ஆத்தூர்,  நரசிங்கபுரம் நகரங்களில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் இல்லை

ஆத்தூர்,  நரசிங்கபுரம் நகரங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என நகராட்சி ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆத்தூர்,  நரசிங்கபுரம் நகரங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என நகராட்சி ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர்-ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், ஆத்தூர் நகருக்கு குடிநீர் பெறப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் பிரதானக் குழாய் துளசம்பட்டி அருகே உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.  இதனால்,  வெள்ளி, சனிக்கிழமைகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்றும் பொதுமக்கள் சேமித்து வைத்துள்ள காவிரி குடிநீரைசிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் க.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதே போல்,  நரசிங்கபுரம் நகரில் மேற்படி இரண்டு நாள்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என நகராட்சி ஆணையாளர் கா.சென்னுகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com