எடப்பாடி அருகே மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி உயிரிழந்தார்.
ஈரோடு அய்யனாரப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த மறைந்த சின்னதம்பி (எ)சுரேஷ் மனைவி கோகிலா. இவர்களுக்கு பிரிதா(18), சுவேதா (15). எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் பிரிதா இரண்டாம் ஆண்டும், ஈரோட்டில் உள்ள உள்ள தனியார் பள்ளியில் சுவேதா 10ஆம் வகுப்பும் படித்துவந்தனர்.
இந்த நிலையில், விடுமுறைக்காக சுவேதா தனது தாய் கோகிலாவுடன் எடப்பாடி உத்தண்டிக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது சுவேதா கடும் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டார். எடப்பாடி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வெளியூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சுவேதா மீண்டும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தார்.