வடகுமரையில் ஜோதி தரிசனம் நடைபெற்றது.
அருள்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 195-ஆ வது ஆண்டு வருவிக்கவுற்ற நாள் விழா தலைவாசல் அருகேயுள்ள சின்னவடலூர் எனும் சத்திய ஞான சபை வட குமரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சமரச சுத்த சன்மார்க்க சங்கங்களின் மாநிலப் பொதுச்செயலர் வடலூர் ஜி.வெற்றிவேல் தலைமை வகித்தார். மருத்துவர் சி.காந்திமதி முன்னிலை வகித்தார். வடகுமரை சத்திய ஞான சபை நிறுவனர் பி.ஆறுமுகம் வரவேற்றார். விழாவையொட்டி, ஜோதி தரிசனம், அன்னதானம், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.