காட்டுக்கோட்டையில் போலி மருத்துவர் மீது புகார்

காட்டுக்கோட்டையில் போலி மருத்துவர் மீது சுகாதார நிலைய மருத்துவர் ஆர்த்தி தேவி செவ்வாய்க்கிழமை தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

காட்டுக்கோட்டையில் போலி மருத்துவர் மீது சுகாதார நிலைய மருத்துவர் ஆர்த்தி தேவி செவ்வாய்க்கிழமை தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள காட்டுக்கோட்டையில், ஹோமியோபதி மருத்துவராக அழகுவேல் மகன் கணேஷ்ராஜ் (40) பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் மருத்துவமனை வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தாராம்.
இதனை அறிந்த ஆத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் எஸ்.அசோக்குமார், சேலம் தொழுநோய் துணை இயக்குநர் குமுதா, காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஆர்த்தி தேவி ஆகியோர் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும், அங்கிருந்த ஆங்கில மருந்துகளையும் கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com