ஆத்தூர் முட்டல் கிராமத்தில் உள்ள ஆணைவாரி ஏரி புதன்கிழமை நிரம்பியது.
ஆத்தூர் கல்லாநத்தத்தை அடுத்துள்ள முட்டல் கிராமத்தில் உள்ள ஆணைவாரி ஏரி கடந்த சில நாள்களாக பெய்த மழையால் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் ம.செல்வன் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை அணையிலிருந்து திறந்துவிடுவது தொடர்பாக ஆலோசனை செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.