ஆத்தூர் கைலாசநாதர் கோயிலில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோயிலில் காலை முதல் சிறப்பு யாகம் நடைபெற்று அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதையடுத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். பின்னர் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.