ஓமலூர் அருகே மணல் கடத்திச் சென்ற நான்கு சரக்கு லாரிகளை தொளசம்பட்டியில் போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தொளசம்பட்டி போலீஸார் அமரகுந்தி, தொளசம்பட்டி ஆகிய பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த நான்கு சரக்கு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் லாரிகளில் மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. போலீஸாரை சோதனையிடுவதைக் கண்டதும் லாரி ஓட்டுநர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து மணல் கடத்திய 4 லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.