இளம்பிள்ளை அருகே செல்லிடப்பேசிக் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்லிடப்பேசி மற்றும் உதிரிபாகங்களை திருடியதாக மூன்று பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இளம்பிள்ளை அருகேயுள்ள சமுத்திரம் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நடுவனேரி வேலகவுண்டம்பாளையத்தில் செல்லிடப்பேசிக் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் அக்டோபர் 13-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்லிடப்பேசி மற்றும் அதன் உதிரி பாகங்களை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து ராஜ்குமார் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நடுவனேரி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (31), நடுவனேரி புதூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (33), பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்டன் (25) ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.