மல்லியகரையில் நிலத் தகராறில் விவசாயியைத் தாக்கிய வழக்கில் பெண் உள்பட இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஆத்தூரை அடுத்த மல்லியகரை அருகேயுள்ள மேற்குராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (54). விவசாயி. இவரது தம்பி தங்கராஜ் (50). இருவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி மாலை ஏற்பட்ட தகராறில் தங்கராஜ் மனைவி சின்னம்மாள், மகன் செல்லமுத்து ஆகியோர், சம்பத்குமாரை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த சம்பத்குமார் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த மல்லியகரை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தட்சிணாமூர்த்தி சின்னம்மாள் மற்றும் செல்லமுத்துவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.