ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் தாய், மகன் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலதி. மகன் பரந்தாமன் (3).
இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி மாலதி தனது மகன் பரந்தாமனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் மனைவி, மகன் கிடைக்கவில்லை. மேலும், மாலதி வீட்டில் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதம் கிடைத்துள்ளது. அதில் எங்களை தேட வேண்டாம். நாங்கள் நிம்மதியாக இருக்கச் செல்கிறோம் தெரிவித்துள்ளார். இது குறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் எஸ்.செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.