நீட் தேர்வுக்கு விலக்கு கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நீட் தேர்வு முறையால் தமிழகத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், நீட் தேர்வு முறையை தமிழத்தில் இருந்து நீக்குவதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.
மேலும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com