நரசிங்கபுரம் நகராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் படிவங்கள் வழங்கும் விழா சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் காட்டுராஜா (எ)எம்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் உறுப்பினர்கள் படிவங்களை வழங்கினார். ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஊராட்சிமுன்னாள் தலைவர் க.சண்முகம், ஆத்தூர் நகரச் செயலாளர் என்.ராஜேந்திரக்குமார்,நரசிங்கபுரம் நகரச் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.