ஆத்தூரில் மோசடி செய்தவர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் 

ஆத்தூர் புதுப்பேட்டையில் ரூ. 2 கோடியை மோசடி செய்தவர் வீட்டை ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டனர். 

ஆத்தூர் புதுப்பேட்டையில் ரூ. 2 கோடியை மோசடி செய்தவர் வீட்டை ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டனர்.
 சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (39). இவரது மனைவி புஷ்ப பிரியா. இருவரும் புதுப்பேட்டை, மேட்டுத் தெரு, பழையபேட்டை பகுதிகளில் பலகாரச் சீட்டு, நகை சீட்டு, சிறுசேமிப்பு சீட்டு என பல வகை சீட்டு நடத்தி வந்தனர்.
 இதையடுத்து பொதுமக்களிடமிருந்து பணம் வாங்கி அதற்கான வட்டியையும் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் சீட்டு பணம் மற்றும் வாங்கிய பணம், நகைகள் ஆகியவைகளை இத்தம்பதி ஏமாற்றியுள்ளனராம்.
 இதனால் பாதிக்கப்பட்டோர் அண்மையில் சாலை மறியல் செய்ததோடு, காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இருப்பினும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், ஜெயப்பிரகாஷ் தம்பதி வீட்டை காலி செய்ய இருப்பதாக பாதிக்கப்பட்டோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொதுமக்கள் அவர்களின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
 தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸார் அந்த வீட்டில் இருந்த ஜெயப்பிரகாஷின் உறவினரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com