சங்ககிரி நந்தி அறக்கட்டளை மற்றும் சங்ககிரி ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் கோடைகால விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா சங்ககிரி பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி. மணி விழாவுக்கு தலைமை வகித்தார்.
வருவாய்க் கோட்டாட்சியர் டி.ராமதுரை முருகன்விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
ரஜினி மக்கள் மன்றச் செயலர் எம்.ஜெயபிரகாசம் முன்னிலை வகித்தார். நந்தி விளையாட்டு மைய நிர்வாகி எ.சுரேஷ் வரவேற்றார். சங்ககிரி ரோட்டரிகிளப் தலைவர் எஸ்.ராமசாமி, செயலர் எஸ்.செந்தில்குமார், நிர்வாகிகள் எ.வெங்கடேஸ்வர குப்தா, கே.ராமாசமி, திரு ஸ்டுடியோ ஆர்.கார்த்திகேயன், கிரிக்கெட் பயிற்சியாளர்கள் எஸ்.திருநாவுக்கரசு, எ.யுவனேஷ், குத்துசண்டை பயிற்சியாளர் எஸ்.பிரசாத் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுபோட்டிகள் ஏப். 15-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக 8 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நடைபெற உள்ளன. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர்.
மாணவ, மாணவிகள் 9965046612, 8072999462, 9994902725 என்ற செல்லிடப் பேசி எண்களில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.