முன்னாள் அமைச்சர் முத்துசாமி மனைவி காலமானார்: முதல்வர், துணைமுதல்வர் நேரில் அஞ்சலி 

முன்னாள் தமிழக அமைச்சர் சு. முத்துசாமியின் மனைவி சனிக்கிழமை காலமானதையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்துக்கு

முன்னாள் தமிழக அமைச்சர் சு. முத்துசாமியின் மனைவி சனிக்கிழமை காலமானதையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்துக்கு சென்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினர்.
 முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தலைமையிலான அமைச்சரவையில், போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சு.முத்துசாமி. இவர், தற்போது ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி மு. ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானார். அவரது உடல் அவரது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அடக்கம்
 செய்யப்பட்டது.
 இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நெடுங்குளம் கிராமத்தில் முத்துசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று ஜெயலட்சுமியின் படத்துக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
 மேலும் முத்துசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இருவரும் ஆறுதல் கூறினர்.
 இதுபோல அமைச்சர்கள் தங்கமணி ,கே.சி. கருப்பணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சரோஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் செம்மலை, வெற்றிவேல், சக்திவேல், சித்ரா, மனோன்மணி, சின்னதம்பி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து கோவை வழியாக முதல்வர் சென்னை திரும்பினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com