மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 49 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக சரிந்திருந்தது.
கடந்த 5 நாள்களாக மேட்டூர் அணைக்கு நொடிக்கு 37 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 49 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்குக் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 35.87 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 10.06 டி.எம்.சியாக இருந்தது.