ஏற்காடு மலைப் பாதையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில், இளைஞர் உயிரிழந்தார்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் மகன் அருண்குமார் (20), அதே பகுதியைச் சேர்ந்த தேசிகன் மகன் விஜய் (20), அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சூரியநாரயணன் (20) ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் ஏற்காடு சென்றுவிட்டு திங்கள்கிழமை பிற்பகல் சேலம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
20-ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்த போது, சேலத்திலிருந்து ஏற்காடு நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அருண்குமார் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து போருந்து ஒட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.