காடையாம்பட்டியை அடுத்த தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேட்டு மகன் விஜயகுமார் (23), தனியார் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் மகளான 11-ஆம் வகுப்பு மாணவியை, காதலித்து வந்ததாராம். இந்த நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, விஜயகுமார் பலாத்காரம் செய்தாராம். இதில், அவர் கர்ப்பம் தரித்தாராம். புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, விஜயகுமாரை கைது செய்தனர்.