எடப்பாடி அருகே திமுக  தொண்டர்கள் மூவர்  உயிரிழப்பு

எடப்பாடி அருகே  கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக தொண்டர்கள் மூவர் உயிரிழந்தனர். 

எடப்பாடி அருகே  கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக தொண்டர்கள் மூவர் உயிரிழந்தனர். 
எடப்பாடி அருகே பூலாம்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த
தி.மு.க. தொண்டர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பூலாம்பட்டி பேரூராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்  வெங்கடாசலம்  (65).  திமுக தொண்டர். இவர் புதன்கிழமை காலை கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்படும்
காட்சிகளை வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்தாராம்.   அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உதவிக்கு மனைவியை அழைத்துள்ளார். இதையடுத்து,  சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.அவரது உடலுக்கு அப் பகுதியைச் 
சேர்ந்த முக்கிய திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
தூக்கிட்டுத் தற்கொலை... கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு, எடப்பாடி அருகே திமுக தொண்டர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
எடப்பாடியை  அடுத்த கச்சுபள்ளி, எலவம்பாளைம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (எ) வெள்ளக்குட்டி (45).  கூலித் தொழிலாளி. இவருக்கு சுசீலா (38) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.  திமுக தொண்டரான இவர் புதன்கிழமை  அந்தப் பகுதியில் கருணாநிதியின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.  இதையடுத்து வீட்டுக்குச் சென்ற ராஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  
இதுகுறித்து கொங்கணாபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதேபோல், திமுக தொண்டர் கச்சுப்பள்ளியைச் சேர்ந்த லட்சுமணன்(40) என்பவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com