தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் முழ்கி முடி திருத்தும் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம், வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சதீஸ் (24). அவர் அந்தப் பகுதியில் முடிதிருத்தும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆலச்சம்பாளையம் பகுதிகளில் உள்ள கோயில்களில் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. அவர் தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் அவரது உறவினர்களுடன் சேர்ந்து குளிக்க இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாரதமாக சூழலில் சிக்கி இறந்தார். தேவூர் போலீஸார் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.