தமிழக பள்ளிக்கல்வித் துறை 2018-19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டஅறிவிப்பின்படி 95 அரசு உயர்நிலைப் பள்ளிகளை அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அதற்கான பணியிடங்களை தோற்றுவித்தும் அரசாணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், (அரசாணை எண்: 166 நாள் 7.8.2018) சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் விவரம் வருமாறு:
சேலம் மாவட்டம்: கொண்டயம்பள்ளி, மணியனூர், சிந்தாமணியூர், குண்டுக்கல், பாகல்பட்டி, அர.செட்டிப்பட்டி, நாழிக்கல்பட்டி.
நாமக்கல் மாவட்டம்: பொம்மம்பட்டி.
தருமபுரி மாவட்டம்: சிட்லிங், பெரியாம்பட்டி, கம்மாளப்பட்டி, வத்தல்மலைபெரியூர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்: மல்லப்பாடி, இராமாபுரம், முல்லைநகர், ஓசூர், காளிங்காவரம்.
தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகள்...
தமிழகம் முழுவதும் 95 நடுநிலைப்பள்ளிகள் அரசு உயர்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதில் சேலம் ,நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் (19 பள்ளிகள்) பெயர்ப் பட்டியல் விவரம் வருமாறு: (அடைப்புக் குறிக்குள் ஒன்றியத்தின் பெயர்)
சேலம் மாவட்டம்- குருக்கல்பட்டி(எடப்பாடி ), நடுவலூர்(கெங்கவல்லி), கன்னந்தேரி (மகுடஞ்சாவடி), தவளப்பட்டி(ஆத்தூர்), கம்மாளப்பட்டி(பனமரத்துப்பட்டி) , பாலக்குட்டப்பட்டி(ஓமலூர்).
நாமக்கல் மாவட்டம்- ஆவத்திபாளையம் (பள்ளிபாளையம்), எஸ்.வாழவந்தி(மோகனூர்). கருமகவுண்டம்பாளையம் (திருச்செங்கோடு), சேப்பங்குளம்பட்டி(கொல்லிமலை),.
தருமபுரி மாவட்டம்: குண்டகானூர் (காரிமங்கலம்), ஈச்சம்பள்ளம் (பாலக்கோடு), ஜோகிப்பட்டி(பாலக்கோடு ), ஜெல்மாரம்பட்டி (பென்னாகரம்), பொய்யப்பட்டி (அரூர்).
கிருஷ்ணகிரி மாவட்டம்: சந்திரப்பட்டி (ஊத்தங்கரை), பெத்தனப்பள்ளி (கிருஷ்ணகிரி), நந்திமங்கலம் (ஓசூர்), பெரிய ஆலேரஅள்ளி (மாத்தூர்).