மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் மன்றத்தின் சார்பில், நாகசாகி மற்றும் ஹிரோஷிமா நினைவு நாள் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பள்ளி அறிவியல் ஆசிரியர் ஆர்.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
8-ஆம் வகுப்பு மாணவர்கள் காவியா, இளவரசன், ஹரிவர்ஷன் ஆகியோர் அணுகுண்டு வெடிப்பின் வெப்ப உமிழ்வை ஓவியமாக வரைந்து காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.