உலக புகைப்பட தினப் போட்டி

சேலம் மாவட்ட, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலகப் புகைப்படப் போட்டி நடைபெறுகிறது.

சேலம் மாவட்ட, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலகப் புகைப்படப் போட்டி நடைபெறுகிறது.
 இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயக்குமார் கூறியுள்ளதாவது:
 உலகப் புகைப்பட தினத்தையொட்டி சேலம் மாவட்ட அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணக்கர்களுக்கு எங்கள் தூய்மைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பசுமை இந்தியா, பொது நிலை மக்களுக்கு வளமான இந்தியா ஆகிய மூன்று தலைப்புகளில் போட்டிகள் நடைபெற உள்ளன போட்டிக்கு 10 க்கு 8 அளவிலான புகைப்படத் தினை மட்டுமே ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் ஆர்.ஜெயக்குமார், புகைப்படப் போட்டி ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கன்னந்தேரி அஞ்சல், (வழி) கொங்கணாபுரம், சேலம் மாவட்டம் 637 102 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7305062626, 995161995 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம். இதில் பங்கு பெறுபவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆகஸ்ட் 18-ஆம் தேதி சேலம் மோகன் நகர், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளது என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com