ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஓமலூர் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓமலூர் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 ஓமலூர் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வரலட்சுமி விரத நாளில் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இதில் ஓமலூர் மற்றும் சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்களும் கலந்து கொள்கின்றனர். சுமங்கலி பூஜை, மாங்கல்ய பூஜைகள் நடத்தப்படுகின்றன.
 ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள், குங்குமம், தாலி கயிறு உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்தனர். இந்த பூஜையில் பெண்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com