கோயில் தேரோட்டம்: பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்

வாழப்பாடியில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில், பெண்கள் ஒன்றிணைந்து மாவிளக்கு ஊர்வலம் நடத்தினர்.

வாழப்பாடியில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில், பெண்கள் ஒன்றிணைந்து மாவிளக்கு ஊர்வலம் நடத்தினர்.
 வாழப்பாடியில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது.
 இத்திருவிழா தேரோட்டத்தில் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாழப்பாடி கிழக்குக்காடு அப்புப்படையாச்சி வகையறாவை சேர்ந்த நுôற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பாரம்பரிய முறைப்படி அரிசி, வெல்லம் கொண்டு மாவு உருண்டைகளை தயாரித்து, அதில் வண்ண காகிதப்பூக்களை வைத்து, தாம்பூலத்தட்டுக்களை தலையில் சுமந்துபடி தேர்வீதிகளில் மாவிளக்கு ஊர்வலம் நடத்தினர். நிறைவாக மாரியம்மன் தேர் முன்பாக வைத்து வழிபாடு நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com