வாழப்பாடி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை

வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கோயில்களில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கோயில்களில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பகல் 1 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நிறை ஆடிவெள்ளிக்கிழமை பூஜை நடைபெற்றது. சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோயிலில், ஆடிமாத நிறை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
 வாழப்பாடி, செல்வமுத்து மாரியம்மன் ரத்தினக்கற்கள் அலங்காரத்தில் முத்து பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வாழப்பாடி வட பத்ரகாளியம்மன் கோயில், திரௌபதியம்மன் கோயில், செல்லியம்மன் கோயில், புதுப்பட்டி மாரியம்மன் கோயில்களிலும் ஆடிமாத நிறை வெள்ளிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com