கொளத்தூர் தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ.பணியிடை நீக்கம்

கொளத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


கொளத்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேட்டூர் காவல் உட்கோட்டத்துக்குள்பட்ட கொளத்தூர் காவல் நிலையத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஆய்வாளர் ரவீந்திரன், தலைமைக் காவலர் இளங்கோவன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்தாக தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கராஜ் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், போலீஸார் லஞ்சம் பெற்ற சம்பவத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட இன்னொரு தலைமைக் காவலர் முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கொளத்தூர் காவல் நிலையப் பகுதியில் குற்றச்சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து விசாரிக்க ஓமலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com