வாகனம் மோதியதில் முதியவர் சாவு

சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம், காளிப்பட்டி பிரிவு சாலை அருகே சனிக்கிழமை சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற

சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம், காளிப்பட்டி பிரிவு சாலை அருகே சனிக்கிழமை சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
வைகுந்தம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னாகவுண்டர் மகன் கொளந்தசாமி (75). அவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டின் அருகே செல்லும் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளார் அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டார்.
இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com