வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் கொலை வழக்கில் 11 பேர் கைது

ஆட்டையாம்பட்டி அருகே வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் கொலை வழக்கில் 11 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஆட்டையாம்பட்டி அருகே வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் கொலை வழக்கில் 11 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆட்டையாம்பட்டி, கடத்தூர் அருகே உள்ள கொள்ளுகரட்டில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த சம்பத் (45) என்பவர் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவரது சடலத்தைக் கைப்பற்றி போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அதில் சம்பத், அப்பகுதியில் உள்ள சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் விசாரணை செய்ததில் இதில் தொடர்புடைய வெள்ளையன் (எ) ராஜ்குமார் (21), நவீன்குமார் (27), ஆனந்த் (எ) ஆனந்தராஜ் (23), பாரதி (எ) மோகன்ராஜ் (22), கபில் (எ) கார்த்திக்ராஜ் (24), தீபக் (28), சக்திவேல் (28), குமரவேல் (31), முத்துவேல் (28), தினேஷ் (23), நந்து (24) ஆகிய 11 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் அவர்களது உறவினர் சிறுமிக்கு சம்பத் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததால் ஆத்திரமடைந்து மது அருந்திவிட்டு அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து தனிப்படை போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com