பக்தர்கள் கோயில் உண்டியலில் மனு

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை மாற்றக்கூடாது என வலியுறுத்தி கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் மனுக்களை அளித்தனர். 

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை மாற்றக்கூடாது என வலியுறுத்தி கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் மனுக்களை அளித்தனர். 
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை மாற்றக்கூடாது என வலியுறுத்தியும், இந்து சமய அறநிலையத் துறையில் திறமையான அதிகாரிகளை நியமித்து கோயில் சொத்துகளை மீட்க வேண்டும் என வலியுறுத்தியும், கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திரளான பக்தர்களும்,  இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ் உள்ளிட்டோரும் வந்ததனர்.
பின்னர்  மனுக்களை கோயில் பூசாரியிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கோயில் பூசாரி கோட்டை மாரியம்மன் சிலை முன் வைத்து பூஜை செய்த பின்னர் பொது மக்களிடம் அளித்தார் .
இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட பக்தர்களும், இந்து முன்னணி அமைப்பினரும் கோயில் உண்டியலில் மனுக்களை அளித்த. அந்த மனுவில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல்  சிறப்பாகப் பணியாற்றி கோயில் சொத்துகளை மீட்க உதவ வேண்டும். சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து பொன்.மாணிக்கவேலை மாற்றக் கூடாது.
இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு கோயிலுக்கு ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையில் திறமையான அதிகாரிகளை நியமிக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com